1. காழ்ப்புக் கட்டுரை எழுத யாரையாவது தேர்வுசெய்யுங்கள். (யாரென்பதேல்லாம் முக்கியமில்லை மனத்தைத் தூய்மையாக்கும் யோகம் இது என்பதுமட்டும் ஞாபகமிருக்கட்டும்.)
2. எதற்காக அவர்மேல் காழ்ப்புக் கட்டுரை எழுதப்போகிறீர்களோ அதற்குச் சற்றும் தொடர்பில்லாத திசையில் அவரை தரக்குறைவாக எழுதுங்கள்.
உதாரணத்துக்கு ஈ.வே.ராமசாமிக்கு அவர் ஆற்றிய சமூக சீர்திருத்தப் பணிக்காக விருது வழங்கப்பட்டது தொடர்பாக எழுதப் போகிறீர்களென்றால். ஈ.வே.ராமசாமி ஒரு மோசமான பத்திரிக்கையாளர். கல்கி கிருஷ்ணமூர்த்தி குந்திய கக்கூஸில் ஒன்னுக்குப் போகக்கூட லாயக்கற்றவர். இப்படி எதாவது எழுதவேண்டும்.
3. அடுத்து சுயநினைவுக்கு வந்து சொல்லவந்தது சம்பந்தமாக எதையாவது ஒளர வேண்டும்.
உதாரணத்துக்கு ஈ.வே.ராமசாமி அப்படி என்ன சமூக சீர்திருத்தப்பணி ஆற்றிக் கிழித்துவிட்டார். பதினோராம் நூற்றாண்டில் இராமானுஜர் செய்ததைவிடவா? என்று கொக்கிபோட்டு மடக்க வேண்டும். அப்படியே அவர் செய்ததாகச் சொல்லும் சமூக சீர்திருத்தத்தை ஆழம், தட்டை, மேலோட்டம், பொதுப்புத்தி போன்ற இலக்கிய அளவைகளால் அளந்துகாட்டி இப்படியாப்பட்ட சீர்திருத்தத்துக்கு இராஜாஜி செய்த கல்விச் சீர்திருத்தமே மேல் என்று கிடுக்குப்பிடி போடவேண்டும்.
4. தனிப்பட்ட விஷயங்களில் அவதூறு செய்தல்.
அதாகப்பட்டது இங்கே தமிழ்நாட்டில் திராவிடர்களும் ஆரியர்களும் கூடிக் குலாவி வாழ்வது பிடிக்காமல் வடுக வந்தேறியான ஈ.வெ.ராமசாமி நாயக்கர், திராவிட இயக்கம் மூலம் செய்யும் சதியை தோலுரித்துத் தொங்கவிடவேண்டும்.
5. பொத்தாம்பொதுவாக தாக்ககுதல்.
ஈ.வே.ரா. ஒரு தமிழ் வெறுப்பாளர் தமிழ் எழுத்துருவில் எல்லாம் சீர்திருத்தம் கொண்டுவர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கும் அவருக்கும் "ஸ்நான" பிராப்தம் கிடையாது. என்றெல்லாம் திட்டிவிட்டு. தமிழ் பண்பாடு பற்றி அவருக்கு என்ன தெரியும் இப்படி எதையாவது கேட்டுக்கொண்டே போகவேண்டும்.
6. கடைசியாக நீங்கள் ஒரு உயரமான பீடத்தில் அமர்ந்திருப்பதுபோலவும் அவர் கீழே கைகட்டி வாய்பொத்தி குனிந்து நிற்கிறார் என்றும் கற்பனை செய்துகொள்ளவும். அப்படியே மனதின் அடியாழத்திலிருந்து என்ன வருகிறதோ அதை அப்படியே எழுதிவிடுங்கள் போதும்.
அது இப்படி இருக்கலாம்.
என் தகுதியென்ன தராதரமென்ன என்னையெல்லாம் உன்னை விமர்சனம் செய்யவைத்துவிட்டாயே ஈனப்பிறவியே...
என்னது அடிப்படை அறம்கூட இல்லாமல் இப்படி எழுதலாமா என்று கேட்கிறார்களா ? அதையெல்லாம் வைத்துக்கொண்டு உன்னையாரைய்யா இலக்கியம் பக்கம் வரச்சொன்னது. வேண்டுமானால் அந்தப்பெயரில் கதை ஒன்று எழுது அது போதாதா இலக்கியத்தை உய்விக்க.
இப்போது நீங்களும் இதே டெம்ப்லேட்டில் முயற்சி செய்யவும்.
பின்குறிப்பு: சேப்டியாக ....கட்டுரை எழுதும் முன்பே இதெல்லாம் நானும் என் நண்பரும் திட்டமிட்டு நடாத்திய திருவிளையாடல்களுள் ஒன்று. தமிழ்ச் சமூகத்தை சோதிக்கவே யாம் இப்படிச் செய்தோம் என்று சொல்லும்படி ஒரு கட்டுரை எழுதி டிராப்ட்டில் வைத்துக் கொள்ளவும். எதற்கும் உதவும்.
2. எதற்காக அவர்மேல் காழ்ப்புக் கட்டுரை எழுதப்போகிறீர்களோ அதற்குச் சற்றும் தொடர்பில்லாத திசையில் அவரை தரக்குறைவாக எழுதுங்கள்.
உதாரணத்துக்கு ஈ.வே.ராமசாமிக்கு அவர் ஆற்றிய சமூக சீர்திருத்தப் பணிக்காக விருது வழங்கப்பட்டது தொடர்பாக எழுதப் போகிறீர்களென்றால். ஈ.வே.ராமசாமி ஒரு மோசமான பத்திரிக்கையாளர். கல்கி கிருஷ்ணமூர்த்தி குந்திய கக்கூஸில் ஒன்னுக்குப் போகக்கூட லாயக்கற்றவர். இப்படி எதாவது எழுதவேண்டும்.
3. அடுத்து சுயநினைவுக்கு வந்து சொல்லவந்தது சம்பந்தமாக எதையாவது ஒளர வேண்டும்.
உதாரணத்துக்கு ஈ.வே.ராமசாமி அப்படி என்ன சமூக சீர்திருத்தப்பணி ஆற்றிக் கிழித்துவிட்டார். பதினோராம் நூற்றாண்டில் இராமானுஜர் செய்ததைவிடவா? என்று கொக்கிபோட்டு மடக்க வேண்டும். அப்படியே அவர் செய்ததாகச் சொல்லும் சமூக சீர்திருத்தத்தை ஆழம், தட்டை, மேலோட்டம், பொதுப்புத்தி போன்ற இலக்கிய அளவைகளால் அளந்துகாட்டி இப்படியாப்பட்ட சீர்திருத்தத்துக்கு இராஜாஜி செய்த கல்விச் சீர்திருத்தமே மேல் என்று கிடுக்குப்பிடி போடவேண்டும்.
4. தனிப்பட்ட விஷயங்களில் அவதூறு செய்தல்.
அதாகப்பட்டது இங்கே தமிழ்நாட்டில் திராவிடர்களும் ஆரியர்களும் கூடிக் குலாவி வாழ்வது பிடிக்காமல் வடுக வந்தேறியான ஈ.வெ.ராமசாமி நாயக்கர், திராவிட இயக்கம் மூலம் செய்யும் சதியை தோலுரித்துத் தொங்கவிடவேண்டும்.
5. பொத்தாம்பொதுவாக தாக்ககுதல்.
ஈ.வே.ரா. ஒரு தமிழ் வெறுப்பாளர் தமிழ் எழுத்துருவில் எல்லாம் சீர்திருத்தம் கொண்டுவர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கும் அவருக்கும் "ஸ்நான" பிராப்தம் கிடையாது. என்றெல்லாம் திட்டிவிட்டு. தமிழ் பண்பாடு பற்றி அவருக்கு என்ன தெரியும் இப்படி எதையாவது கேட்டுக்கொண்டே போகவேண்டும்.
6. கடைசியாக நீங்கள் ஒரு உயரமான பீடத்தில் அமர்ந்திருப்பதுபோலவும் அவர் கீழே கைகட்டி வாய்பொத்தி குனிந்து நிற்கிறார் என்றும் கற்பனை செய்துகொள்ளவும். அப்படியே மனதின் அடியாழத்திலிருந்து என்ன வருகிறதோ அதை அப்படியே எழுதிவிடுங்கள் போதும்.
அது இப்படி இருக்கலாம்.
என் தகுதியென்ன தராதரமென்ன என்னையெல்லாம் உன்னை விமர்சனம் செய்யவைத்துவிட்டாயே ஈனப்பிறவியே...
என்னது அடிப்படை அறம்கூட இல்லாமல் இப்படி எழுதலாமா என்று கேட்கிறார்களா ? அதையெல்லாம் வைத்துக்கொண்டு உன்னையாரைய்யா இலக்கியம் பக்கம் வரச்சொன்னது. வேண்டுமானால் அந்தப்பெயரில் கதை ஒன்று எழுது அது போதாதா இலக்கியத்தை உய்விக்க.
இப்போது நீங்களும் இதே டெம்ப்லேட்டில் முயற்சி செய்யவும்.
பின்குறிப்பு: சேப்டியாக ....கட்டுரை எழுதும் முன்பே இதெல்லாம் நானும் என் நண்பரும் திட்டமிட்டு நடாத்திய திருவிளையாடல்களுள் ஒன்று. தமிழ்ச் சமூகத்தை சோதிக்கவே யாம் இப்படிச் செய்தோம் என்று சொல்லும்படி ஒரு கட்டுரை எழுதி டிராப்ட்டில் வைத்துக் கொள்ளவும். எதற்கும் உதவும்.
No comments:
Post a Comment