Monday, October 28, 2013

வஞ்சி வந்தனளே


                              கீர்த்தனை:

பல்லவி:
வஞ்சி வந்தனளே மலைகுற
வஞ்சி வந்தனளே

அனுபல்லவி:
வஞ்சி எழிலப ரஞ்சி வரிவிழி
நஞ்சி முழுமர நெஞ்சி பலவினில்
அஞ்சு சடைமுடி விஞ்சை அமலனை
நெஞ்சில் நினைவொடு முஞ்சு குறிசொல - வஞ்சி வந்தனளே....

சரணம்:
ஆடும் இருகுழைத் தோடும் ஒருகுழற்
காடும் இனைவிழி.......சாடவே
கோடு பெருமுலை மூடு சலவையி
னூடு பிதுங்கிமல்...........லாடவே
தோடி முரளிவ ராளி வயிரவி
மோடி பெறவிசை.........பாடியே
நீடு மலைமயி லாடு மலைமதி
சூடு மலைதிரு கூட மலைகுற - வஞ்சி வந்தனளே

                               - திரிகூட ராசப்பகவிராயர்


அதே சந்தத்தில் எனது முயற்சி........

பல்லவி:
வஞ்சி வந்தனளே மழையெனும்
வஞ்சி வந்தனளே.......

அனுபல்லவி:
மிஞ்சு கடலினில் விஞ்சு கதிரவன்
மஞ்சு குவளயில் கொஞ்ச முகந்திட
நஞ்சு உலகினில் பஞ்ச மழிந்திடக்
கெஞ்சு முழவர்கள் நெஞ்சு குளிர்ந்திட - வஞ்சி வந்தனளே.....

சரணம்:
காடு மலைகளில் ஓடை குளங்களில்
ஓடும் நதிகளில்...........ஆடியே
நாடு நகர்களில் தாள ஜதியுடன்
ஆடி யிடியுடன்.............பாடியே
நீடு வனங்களும் வாடும் பயிர்களும்
கோடி உயிர்களும்.......வாழவே
பாடு மழைவிளை யாடு மழைசதி
ராடு மழைபுவி கூடு மழையெனும் - வஞ்சி வந்தனளே......
                           
                          - யாழ்

No comments:

Post a Comment