Saturday, March 15, 2014

நான் கொண்ட சுதந்திரம்

நிர்பந்தங்களால்
நினைவு நிறைந்திருக்க 
கதவுகள்
தாழிட்ட அறையின் 
விட்டத்தில்  
சுழலும்
காற்றாடியைப் 
பார்க்கவும் மனமின்றி 
குப்புறக் கவிழ்ந்தபடி 
சுதந்திரக் காற்றொன்று 
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்!

No comments:

Post a Comment