கற்பன பண்ணவேண்டியதுதான் அதுக்காண்டி இப்பிடியா
தன்னை நிந்தைசெய் வெண்நகை மேல்பழி சார
மன்னி ஆங்கது நிகர்அற வாழ்மனை வாய்தன்
முன்இ றந்திடு வேன்என ஞான்றுகொள் முறைமை
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்திநின் றிட்டாள்
மன்னி ஆங்கது நிகர்அற வாழ்மனை வாய்தன்
முன்இ றந்திடு வேன்என ஞான்றுகொள் முறைமை
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்திநின் றிட்டாள்
- சிவப்பிரகாசர்
தன்னைக் களங்கப்படுத்திய பற்கள் (வெண்நகை) மேலே பழி வந்து
சேரட்டும் என்று அப்படி களங்கப்படுத்தியதற்கு பழிக்குப்பழி வாங்கவும்
(நிகர்அற) பல்வாழும் வீடாகிய வாய்க்குமுன் போய் இறந்துவிடுவேன் என்று சொல்லி தூக்கில் தொங்கியதுபோல் (ஞான்று - தொங்கு) இருக்கும் மூக்கு அணியை ஒருத்தி அணிவித்தாள்.
No comments:
Post a Comment